Sunday, December 30, 2018

வடமாகாணத்தின் முன்னிலைப் பெறுபேறுகள்.... கிளிநொச்சியின் முன்னிலை பெறுபேறுகள் கிராமப்புறம் வசமானது..

இம்முறை இடம்பெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய தமிழ் மொழி மூலமான வடக்கு மாகாண பரீட்சாத்திகளில், சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவி சிங்கராசா நிலக்சனா,கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில், முதலாமிடத்தையும் தேசிய ரீதியில் 28 ஆவது நிலையையும் பெற்றுள்ளார்.

அத்துடன் தமிழ் மொழி மூலம் பௌதீக விஞ்ஞான துறையில் தோற்றிய பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுாரி மாணவன் சண்முகநாதன் சஞ்சித், மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். அத்தோடு அவர் தேசிய ரீதியில் ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளார்.



இதேவேளை கிளிநொச்சி முருகானந்தா கல்லுாரி மாணவி கந்தையா ஜனனி, வணிகப்பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த மிதுர்சன் என்ற மாணவர், உயிரியல் பிரிவில் 3 A சித்திகளை பெற்று, கல்லூரியில் முதல் இடத்தையும், மாவட்ட மட்டத்தில் 2 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் சிறந்த பெறுபேறுகள், கிராமப்புறம் வசமானது.

கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி ஜெ.மகிழினி,
கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் மாவட்ட முதல் நிலை பெற்றுள்ளார்.

விஞ்ஞானப் பிரிவில், முதல் நிலையை முரசுமோட்டையைச் சேர்ந்த க.அபிசிகா,பெற்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு நாடு முழுவதும் 3 லட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். நேற்று வெளியாகிய பெறுபேறுகள் படி, 1 லட்சத்து 67 ஆயிரத்து 907 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக,பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 119 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com