Sunday, December 30, 2018

ஹட்டன் பிரதேசத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தற்காலிக வீடுகள் அமைக்கும் பணியில் விமானப்படை.

திடீரென ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, ஹட்டன் - டிக்கோயா - போடைஸ் பகுதியிலுள்ள குடியிருப்புத் தொகுதியிலுள்ள வீடுகள் பல சேதமடைந்தன.

இந்த அனர்தத்தால் காரணமாக சுமார், 30 ஏக்கர் தோட்டப்பகுதியிலுள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த தீப்பரவலால் தமது வீடுகளை இழந்த மக்களுக்காக, தற்காலிக கூடாரங்களை அமைக்கும் பணிகள், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பணிகளை ராணுவத்தினர்,விமானப்படையினர்,பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தோட்ட மக்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். போடைஸ் தோட்ட பொது மைதானத்தில் இந்த கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த தற்காலிகமாக கூடாரங்களை அமைப்பதற்கு, தோட்ட நிர்வாகமும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சும் இணைந்து, 5 இலட்சம் ரூபா பெறுமதியான தகரங்களை வழங்கியுள்ளன.

அத்துடன், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக தற்காலிக மலசலகூடங்களும் வழங்கப்பட்டுள்ளன.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com