Saturday, December 29, 2018

இலங்கை குறித்த மற்றுமொரு பிரேரணையும் ஐநாவில்...

ஐக்கிய நாடுகள் சபையின் 40 வது கூட்டத்தொடர், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல், மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரின் போது, பிரிட்டன் அல்லது நோர்வே நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள், இலங்கை குறித்த பிரேரணையை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை மீதான பிரேரணையொன்று ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த பிரேரணை கடந்த 2017 ஆம் ஆண்டுடன் முடிவடைந்திருந்தாலும், மேலும் 2 ஆண்டுகள் பிரேரணைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த கால அவகாசம் முடிவடையவுள்ள நிலையில், அடுத்து கூடவுள்ள 40 வது கூட்டத்தொடரின் போது, இலங்கை குறித்த முழுமையான ஆய்வு விபரங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார்.

இந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் அரசியல் நிலவரம் சூடு பிடிக்கக் கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரின் போது இலங்கை வழங்கிய வாக்குறுதிகள், தற்போது எந்தளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது? என்பது குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com