Saturday, December 29, 2018

அரச நிறுவனங்களைச் சேர்ந்த 35 அதிகாரிகள், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது...

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும், சுமார் 35 அரச அதிகாரிகள், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர், பிரியந்த சந்திரஸ்ரீ கூறினார்.

இந்த வருடத்தில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ், சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த அவர், அவர்களுள் 35 பேர், அரச நிறுவனங்களின் அதிகாரிகள் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேற்படி கைது செய்யப்பட்ட நபர்களில் 9 பேர், காவல்துறையில் பல்வேறுபட்ட தரங்களை உடையவர்கள் என்று அவர் தெரிவித்தார்.

காவல்துறைக்கும் மேலதிகமாக, தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர், ஏற்றுமதி,இறக்குமதி திணைக்கள கட்டுப்பாட்டாளர், ஆயுர்வேத திணைக்களத்தின் உயர் அதிகாரி, மாஹாவெலி அபிவிருத்தி சபை அதிகாரி, போக்குவரத்து அதிகாரசபையின் உயர் அதிகாரி உள்ளிட்ட பலர் கைதாகியுள்ளனர்.

இந்த கைதுகளில், கந்தளாய் சீனித் தொழிற்சாலையை இந்திய நிறுவனத்திற்கு கொடுப்பதற்காக 540 மில்லியன் ரூபாவை லஞ்சமாகப் பெற முனைந்த ஜனாதிபதி செயலணியின் பிரதானியும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com