Thursday, December 27, 2018

சாதாரண தர விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக ஆசிரியர்கள் ஏற்பாடு!

சாதாரண தர பரீட்சைத் தாள் மதிப்பிடல் பணிகளிலிருந்து விலகுவதற்கு ஆசிரியர்கள் தயாராகி வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவிக்கிறார்.

2017 க.பொ.த சா தரம் கணிதப்பாட விடைத்தாள மதிப்பிடுவதற்காக ஓரு விடைத்தாளுக்கு 140 ரூபாய் செலுத்துவதுடன் அது இம்முறை (2018) 120 ரூபாவாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதேபோன்று ஒரு விடைத்தாளை மதிப்பிடுவதற்கு வழங்கிய 38 ரூபாய் 29 ரூபாவாக இம்முறை குறைக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிக்கிறது.

அதனால் விடைத்தாள் திருத்தப் பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தை அதிகரிக்கும்படி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தொடர்ச்சியாக கோரிய போதிலும் இந்த கோரிக்கை இதுநாள்வரையில் நிறைவேற்றப்பட வில்லை.

அவ்வாறு இருக்கும்போது 2017 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட கட்டணத்தை இவ்விதமாக குறைப்பதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை எனவும் அதை அனுமதிக்க முடியாதெனவும் அந்தக் கட்டணங்களை முன்னர் இருந்த நிலைக்கு கொண்டு வரப்படாவிட்டால் எதிர்வரும் நாட்களில் மதிப்பிடல் நடவடிக்கைகயை தொடர்வதா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்படுமென அச்சங்கம் வலியுறுத்திக் கூறுகிறது.

அச் சங்கத்தின் செயலாளர் கையொப்பமிட்ட கடிதமொன்றை பரீட்சை ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com