Thursday, December 27, 2018

ஜனாதிபதி பொய் கூறுகின்றார்! மஹாநாயக்க தேர்களின் காலடியில் ஐ.தே.க அமைச்சர்

ஜனாதிபதி அவர்களுக்கு எதிராக கொலை சூழ்ச்சி இடம் பெற்றது என கூறியமை முற்றிலும் பொய் என பொது நிர்வாக மற்றும் அனார்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்.சித் மத்தும பண்டாரா அவர்கள் தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரர்களை வணங்கிவிட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய அவர் மேற்கண்ட விடயத்தை தான் சங்கைக்குரிய தேரர்களுக்கு எடுத்துரைத்ததாக கூறினார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை தனக்கு வழங்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி வைத்துக் கொண்டமைக்கான காரணம் கொலை சூழ்ச்சி தொடர்பான விசாரணைகள் எவ்வித தடையுமின்றி நடைப்பெறுவதற்காகவே என கூறப்படுகிறது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com