Friday, December 7, 2018

மைத்திரியால் பறிபோனது சிறிதரனின் நாக அஸ்திரம் –செம்பியன்

கிளிநொச்சியில் மிகவும் மோசமான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துவரும் சிறிதரன் குழு, செத்த வீடு என்றால் பிணமாகவும், கல்யாண வீடு என்றால் மாப்பிளையாகவும் வேசமிட்டுப் பழகியவர்கள். கிளிநொச்சியில் எந்த முதலீடும் இல்லாது அரசியல் செய்யும் இடமாக மாவீரர் துயிலுமில்லம் மற்றொன்று கர்ணனின் நாகஸ்திரம் போல் சிறிதரனின் நாகஸ்திரம்.

இவ்வாறே எவ்வித உழைப்பும் இல்லாமல் இரணைமடுக்குளத்தை வைத்து அரசியல் லாபம் தேட முற்பட்டு சிறிதரன் அம்மணமாகி நிற்கின்றார். இரணைமடுக் குளம் புனரமைக்கப்பட்டால் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் சொண்டு செல்லப்பட்டு விடும் என்ற ஒரே காரணத்திற்காக குளத்தின் அபிவிருத்தியையே நேரடி மற்றும் மறைமுக அழுத்தங்களால் சிறிதரன் தடுத்துக்கொண்டிருந்தார் என்பது ஊர் அறிந்த உண்மை.

இத்தனை எதிர்ப்புக்களையும் தாண்டி ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு தற்போது இரண்டு வருடங்களின் பின் குளத்தின் நீர் கொள்ளளவு முழுமையை எட்டியுள்ள நிலையில், குளத்தின் வான் கதவுகள் பாதுகாப்புக்காக திறக்கப்படுவதை ஒரு பெரிய விடயமாக்க அங்கே ஒரு போட்டோ சூட்டிங் நடாத்தி தனது அண்ணனின் இணையங்களின் ஊடாக மக்களின் காதுகளில் பூச்சுத்துவதற்காக ஒற்றைக்காலில் நின்றார் சிறிதரன்.

இதற்காக இவர் கிளிநொச்சி அரச அதிகாரிகளுக்கு அழுத்தங்களை கொடுத்தபோதும், சிறிதரனின் பருப்பு அரச அதிகாரிகளிடம் வேகவில்லை. அதற்கு காரணம் நல்லாட்சி இருந்தபோது நாங்கள் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ளாவிட்டாலும் அரசாங்கம் எங்களுடையது என்று சொல்லிவந்த நிலையில் தற்போது அரசாங்கமே இல்லையென்றால் நம்ம ஊர்காரன் சும்மா ஆட்களா ஆழுநரிடம் கண்ணை காட்டிவிட்டு கம் என்று இருந்து விட்டனர். விடயத்தை வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே கையிலெடுத்ததால் நாகஸ்திரம் மைத்திரியின் கைக்கு இன்று சென்றுள்ளது


மத்திய அரசின் அபிவிருத்தி திட்டங்கள் வரும்போது நாங்கள் தேசியக் கொள்கையுடன் பயணிக்கின்றோம், எமக்கு அபிவிருத்தி தேவையில்லை , எமக்கு கொள்கை தான் முக்கியம் என முளக்கமிடும் சிறிதரன் அபிவிருத்திகள் முடிந்ததும் , அதனை திறந்துவிடுவதற்காக முந்தியடிப்பதை பலரும் அவதானித்தன் பலனாகவே இம்முறை இவ்வாறு மூஞ்சையில் குத்துவாங்கியுள்ளார்.

இங்கு மிகவும் கேவலமான விடயம் யாதெனில், குறித்த குளத்தின் நீரினை பாசனத்திற்காக திறந்துவிட்டபோது அதில் பங்கெடுக்காத சிறிதரன், குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து பாதுகாப்பு ஏற்பாடாக திறந்து விடப்படுகின்றபோது முண்டியடித்துக்கொண்டதற்கான காரணம் ஒரு சில மாதங்களில் தேர்தல்கள் வருகின்றது என்பதாகும்.

இச்செயற்பாட்டினால் சில வேளைகளில் தாழ் நிலப்பரப்பில் வாழுகின்ற மக்களுக்கு பாதிப்புக்கள்கூட வரலாம் வயல்களும் அழியலாம். இது தொடர்பாக கருத்துரைத்த வயோதிப மாது, சிறிதரன் தண்ணியை திறந்து விட்டு நாங்கள் வெள்ளத்தில் மூழ்கிய பின்னர், வெள்ளநிவாரணம் என அரிசி பையையும் கமறாவையும் தூக்கிக்கொண்டுவருவான், அப்போது என் விளக்குமாறு பதில் சொல்லும் என்றார். இந்த இழிசெயல்களுக்காகவே சிறிதரன் இங்கு கமக்கார அமைப்பு , சமாசம் என்ற அமைப்புக்களுள் தனது எடுபிடிகளை புகுத்தி நாடகமாடுகின்றான் என்றார்.

அவ்வாறானதோர் நாடகத்தையே இன்றும் ஜனாதிபதி அங்கு வருவதற்கு முன்னர் ஆடினார் சிறிதரன். தனது அடியாட்கள் சகிதம் வந்து அவ்விடத்திற்கு வந்திருந்த மக்களிடம் தான்தான் சகலதும் செய்துள்ளதாக நாடகமொன்றை ஆடி படப்பிடிப்பையும் மேற்கொண்டுவிட்டு ஜனாதிபதி வருகின்ற சத்தம் கேட்டவுடன் மாயமாய் மறைந்து விட்டார்.


சிறிதரனின் இச்செயற்பாடு தொடர்பில் பலரும் தமது விமர்சனங்களை எறிந்த வண்ணம் உள்ளனர். சிறிதரனின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் பொன்காந்தன் தனது முகநூலில்: ஊடகமொன்றில் செய்தி பார்த்தேன் இன்று மைத்திரி இரணைமடுவை கற்பழித்தபோது சிறீதரன் மக்களோடு நின்று ரசித்தார். அவர் தனது வாக்குக்காக மதவாச்சிக்கு இங்கால மக்களோட நிற்பார். அங்கால ரணிலோட நிற்பார். துயிலுமில்லத்தை தாவரவியல் பூங்காவாக்க சிறீதரன் முன் மொழிவார் அங்கயன் வழி மொழிவார். பிறகு இன்று அங்கயன் மைத்திரியோட பக்கத்தில நிற்பார் , சிறீதரன் மக்களோட நிற்பார். கடவுளே! இந்தக்கோமாளியின் அரசியல் சித்;தாந்தத்தை விசேடமாக படிக்கவேணும். உனக்கு பின்னால எவ்வளவு சிங்கக்கொடி பறக்குது அதை பாத்தாவது உனக்கு மானம் இருக்கா எண்டு பார்!

இவ்வளவு கொடி பறக்க நீ தான் காரணம் ஸ்ரீ தரன் இரணைமடுவை அரசியல் இலாப பொருளாய் சிங்களவர்களுக்கு அறிமுகம் செய்தது நீ என்று பதிவிட்டிருந்தார்

இபொழுது சிறிதரனின் கபட நாடகம் மக்களுக்கு புலப்பட தொடங்கியுள்ளமை சிறப்பம்சமாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com