Friday, December 7, 2018

பசிக்கொடுமையால் உணவு கேட்டு பொலிஸ் நிலையம் சென்ற சிறார்கள். தாய்கு 12 மாத தடுப்பு காவல் உத்தரவு.

பொத்துவில் கிராமத்தை ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் மூவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கேட்டுள்ளனர். தாம் மூவரும் இரண்டு நாட்களாக உணவு உண்ணவில்லை என்று கூறிய வேளையில் பொத்துவில் பொலிஸ் நிலைய அதிகாரி நிசாந்த குமாரசிங்க உடனே சிறுவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி பற்றி விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. குழந்தைகளின் தந்தை வெளிநாடு ஒன்றில் கடமை புரிகின்றார். ஆனாலும் தாய் குழந்தைகளை பராமரிக்கும் கடமைகளை நிறைவேற்றவில்லை.

குழந்தைகள் இது தொடர்பில் கூறுகையில், தாய் தங்களை பராமரிப்பதில்ல்லை என்றும் தாய்க்கு மாத்திரம் யாரோ ஒருவர் உணவு வழங்குவதாகவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பிள்ளைகளின் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

12மாதக் காலம் தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்று குழந்தைகளை அவரக்ளின் மாமாவிடம் சிறுவர் பிரிவு அதிகாரிகளின் கண்கானிப்பில் இருக்க உத்தரவிட்டது.

13 மற்றும் 14 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளும் 07 வயதுடைய பெண் பிள்ளையொருவருமே பசியென பொலிஸ் நிலையம் சென்றவர்களாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com