Tuesday, December 18, 2018

சக உறுப்பினர்களை தமிரசுக் கட்சியின் தவிசாளர் இரண்டாம் தர உறுப்பினர்களாக நடத்துகின்றாராம்! சாடுகின்றது த.தே. ம. மு

விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் சபையில் இரண்டாம் தர உறுப்பினர்களாக நடத்துகின்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சி. புவனேஸ்வரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

நேற்று (17) கிளிநொச்சியில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில்,

சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த எட்டு மாதங்களாக மக்கள் நலன்சார்ந்த விடயங்களை அமுல்படுத்துவதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவங்களை விட தங்கள் கட்சிசார்ந்த விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பில் பல குறைப்பாடுகளை சுட்டிக்காட்டிய போதும் அதனை கருத்தில் எடுப்பதாக தெரியவில்லை.

நிதி ஒதுக்கீடு, அபிவிருத்திப் பணிகள், தீர்மானங்கள், பிரேரணைகளை உள்ளிட்ட பல விடயங்களில் விகிதார மூலம் தெரிவாகி வந்துள்ள உறுப்பினர்களை தவிசாளர் இரண்டாம் தர உறுப்பினர்களாகவே நடத்துகின்றார்.
வட்டாரங்களின் அபிவிருத்திகள் மற்றும் சபையின் செயற்பாடுகளில் கட்சி நலன்சார்ந்து செயற்பாடுகளை முன்னெடுக்காது முப்பதைந்து உறுப்பினர்களையும் சமமாக கருதி சபையினை கொண்டு நடத்த வேண்டும் என்பதனையும் நாம் இச் சந்தர்ப்பத்தில் கோரிக்கையாக முன்வைக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com