Tuesday, December 11, 2018

தீர்ப்பினை விரைவில் அறிவிக்குமாறு நீதியரசர்களை ஜனாதிபதி கேட்கவுள்ளாராம்.

நாடாளுமன்றம் கலைத்ததுக்கு எதிரான உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பினை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் சட்டமா அதிபரிடனூடாக பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பாராளுமன்ற அமைச்சர் விமல் வீரவங்ச அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டனியின் பிரமுகர்களுடன் ஜனாதிபதியின் செயலகத்தில் நடாத்திய பேச்சுவார்த்தையினை தொடர்ந்து இடம்பெற்ற ஊடவியளாலர் சந்திப்பின் போது விமல் வீரவங்ச இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினுடனான சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் நாட்டின் எதிர்காலம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com