Monday, December 31, 2018

கேப்பாபுலவு மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்..

கொடுத்த வாக்குறுதிக்கிணங்க தமது காணிகளை ராணுவம் விடுவிக்கவில்லை என்று தெரிவித்து, முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

675 வைத்து நாளாக முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான உரிய பதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கவில்லையென, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கவலை வெளியிட்டனர். 2018 டிசம்பர் 31 ஆம் திகதியான இன்று, தமது காணிகள் மீள தரப்படும் என முன்னர் வாக்குறுதி அளித்தவர்கள், இன்று மௌனம் காத்து வருகின்றமை மீண்டும், ஏமாற்றத்தையே தந்து விட்டதாக, கேப்பாபுலவு மக்கள் தமது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.

அத்துடன், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தராத அனைத்து தரப்பினருக்கும் எதிராக இவர்கள் முல்லைத்தீவு இராணுவ முகாமின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேநேரம் மக்களின் ஆர்ப்பாட்டத்தை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், எதிர்வரும் 25 திகதி வரை தமக்கு கால அவகாசம் வழங்குமாறு ஆர்பாட்டக்காரர்களிடன் கோரிக்கை முன்வைத்தார். இதனை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com