Monday, December 31, 2018

சிறிமெவன் ரணசிங்க பதவி விலகலை அறிவித்தார்.... புதிய கடற்படை தளபதி நியமனம்..

இலங்கையின் கடற்படை தளபதியாக பதவி வகித்து வந்த வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க, தாம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க, இன்று நண்பகல் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவிடம், தாம் பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து நாட்டுக்காக உன்னத சேவையை வழங்கிய சிறிமெவன் ரணசிங்கவிற்கு, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சிறிமெவனின் பதவி விலகலை அடுத்து, அந்த பதவிக்கு பியல் D சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையின் 23 ஆவது தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், பியல் D சில்வா, இன்று நியமனம் பெற்றுக்கொண்டார். அத்துடன் நாளைய தினத்திலிருந்து வைஸ் அட்மிரல் பியல் D சில்வா, தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com