Monday, December 17, 2018

மீண்டும் ஒரு முறை ஆட்சியை மாற்றுவோம் மஹந்தர் சூழுரை!

எதிர்பாராத வேளையில் நல்லாட்சி அரசாங்கத்தை மாற்றியதைப் போல எதிர்காலத்திலும் எதிர்பாராத திருப்பு முனையை நாட்டில் ஏற்படுத்துவேன் என நேற்றைய தினம் தங்கல்ல கார்டன் இல்லத்தில் நடைப்பெற்ற மக்கள் சந்திப்பின் போது முன்னால் ஜனாதிபதி மஹிந்த ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொது தேர்தல் ஒன்றினையே மக்கள் எதிர்பார்த்தனர். அதனாலேயே நான் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டேன். இந்நிலையிலேயே உயர்நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டது இதன்காரணமாக நான் பதவியை இராஜினாமா செய்தேன்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று பிரதமாhக பதவி ஏற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்கள். அத்தோடு நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். அன்று கூறியதுவாறு அரசாங்கத்தை மாற்றியது போல் மீண்டும் ஒரு முறை சந்திக்க நேரிடும் என்பதனை பிரதமர் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com