Saturday, December 1, 2018

அர்ஜூன மகேந்திரன் புலிகளுக்கு வரி அறவிடாது கொள்கலன்களை அனுப்பினாராம். திவய்ன

மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜூன மகேந்திரன் இலங்கை முதலீட்டு சங்கத்தில் தலைவராக செயற்பட்ட போது அவரினால் முன்னெடுக்கப்பட்ட ஊழல் வெளிப்பட்டடுள்ளது. எவ்வித வரி அறவீடும் சோதனையும் இன்றி பல கொள்கலன்களை எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிற்காக வன்னி பகுதிக்கு கொண்டு செல்ல இவரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன என திவய்ன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னி விடுவிக்கப்பட்டவுடன் இது தொடர்பான தகவல்கள் வெளிவந்த விசாரணைகளை ஆரம்பமாகியிருந்தபோதும், குறித்த காலத்தின் பின் மழுங்கடிகப்பட்டுள்ளன. நோர்வே அரசினால் வழங்கப்பட்ட வானொலி தொடர்பாடல் அலைவரிசைக்கு தேவையான இணைப்பு கருவிகள் கொண்ட கொள்கலன் ஒன்றிற்கு இறக்குமதி வரி செலுத்தாமை தொடர்பாக சுங்க அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இக்கொள்கலன் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்திற்காக இராணுவத்தினரிற்கு தெரியாத வண்ணம் வன்னி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு;ள்ளதாக குற்றம் சாட்டப்ட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com