Friday, December 28, 2018

கோடீஸ்வரன் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையை நிராகரித்த பிரதேச மக்கள்.

திருக்கோவில் பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமை அகற்றுமாறு அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் மைத்திரபால சிறிசேனவிடம் வேண்டுதல் விடுத்திருந்தார்.

கோடிஸ்வரனின் வேண்டுதலை ஏற்ற மைத்திரபால சிறிசேனவினால் இன்று 28.12.2018 குறித்த முகாம் அகற்றப்படுமென உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 25ம் திகதி ஒன்று திரண்ட பிரதேச மக்கள் இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.

இராணுவ முகாம் அகற்றப்பட்டால் போதைபொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களின் அச்சுறுத்தல்கள் அதிகமாகும் என மக்கள் கூறியதுடன் அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரே தங்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர் என்றும் இராணுவதத்தினர் சென்றுவிட்டால் தங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தமது இவ்விருப்பத்தை மகஜர் ஒன்றின் ஊடாக கோமாரி 242 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் ரணசிங்க விற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொலைநோக்கு இன்றி மேற்கொள்ளும் விடயங்களுக்கு தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை காட்ட முற்பட்டுள்ளமை எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தை கொண்டுவரும் என நம்பப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com