Monday, December 24, 2018

வெள்ளமுள்ளி வாய்காலில் எதை நினைத்து பிரபாகரன் இறுதி மூச்சை விட்டாரோ, அதையே நிறைவேற்ற துடிக்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக்க முயற்சிப்பவர்கள் பிரபாகரனின் இறுதி ஆசையை நிறைவேற்றத் துடிப்பவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

'எதிர்கட்சியில் இருந்து அல்ல மஹிந்தவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கின்றனர். ஏன் இந்த கோபம்? எம்பி பதவியில் இருந்தும் நீக்க மஹிந்த அப்படி இந்த நாட்டு என்ன துரோகம் செய்தார்? மஹிந்தவை விரட்டி சிறையில் அடைத்து கொலை செய்யும் தேவை யாருக்கு உள்ளது? 2009 காலை வெல்லமுள்ளிவாய்க்காலில் வானத்தை பார்த்தபிடி உயிர்விட்ட பிரபாகரன் அந்த நொடியில் தனது ஆத்ம சாந்திக்காக என்ன நினைத்திருப்பாரோ அதனையே இவர்கள் செய்ய பார்க்கின்றனர்" என்று டளஸ் கூறியுள்ளார்.

இந்த அரசாங்கத்திற்கு கூடுதலாக 307 நாட்கள் மாத்திரமே இருக்க முடியும் என்றும் முத்தையாவின் கடையில் சென்று 50 ரூபாவிற்கு 07 பத்தி பைக்கட்டுக்கள் வாங்கி நாளுக்கு ஒன்று வீதம் கொழுத்தினால் இறுதி பத்தி முடியும்போது நாட்டில் புதிய ஆட்சி மலர்ந்திருக்கும் என அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com