Saturday, December 29, 2018

எதிர்கட்சித் தலைவர் விடயத்தில் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டப்படும் சபாநாயகர்..

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே நியமிக்கப்படுவார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மஹிந்த அமரவீர, ஐக்கிய தேசிய கட்சியினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும்,. இந்த நியமனம் குறித்து மீளாய்வு செய்வதற்கு, பாராளுமன்ற தெரிவு குழு ஒன்றை நியமிக்க வேண்டுமென கூறினார்.

அத்தோடு சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஸ செயற்படுவார் என, எழுத்து மூலம் கூறிய போதும், தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சபாயகர் இதுவரை எந்தவித பதிலையும் வழங்கவில்லையென, மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தினார்.

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்கட்சி தலைவராக நியமிப்பதில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் நாம் அனைவரும் கட்சியின் ஒற்றுமையை பாதுகாக்க ஒன்றித்து செயல்படுகிறோம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

நாம் அனைவரும் அடுத்துவரும் தேர்தலுக்கு தயாராகிவிட்டோம். தற்காலத்தில் இனவாதத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் நாம்,சர்வதேச ரீதியான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில், மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மஹிந்த அமரவீர கூறுகிறார். .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com