Monday, December 31, 2018

தேர்தலின் போது அனைவரும் எம்முடன் இணையுங்கள்.... அழைப்பு விடுத்தது சுதந்திர கட்சி

எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளவென, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பாரியதொரு கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர்,பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டணியில் இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறுகிறார். இந்த பேச்சுவார்த்தை, மஹிந்த தரப்பினர், இடதுசாரி கட்சிகள், தமிழ் அரசியல் கட்சிகள் என்பவற்றுக்கு இடையில் இடம்பெறும் என ரோஹன லஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சுதந்தர கட்சியுடன் இணைய விரும்பும் ஏனைய சிறுபான்மை கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

நாட்டில் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்ட போது, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாம் அனைவரும் ஏற்கிறோம். அத்துடன் சுதந்திர கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவளிக்க தயாராக உள்ளோம். அண்மைக் காலமாக சில குழப்பம் விளைவிக்கும் சக்திகள், சுதந்திர கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சுதந்திர கட்சியின் அங்கத்தவர்கள் பலர், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிப்பதாக கூறப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை . அத்துடன், சுதந்திர கட்சியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டவர்களுக்கு, அமைச்சு பதவி வழங்கப்படாது என ஜனாதிபதி கூறியதாக, ரோஹன லக்ஸ்மன் பியதாக குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டில் தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எமது கட்சி எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ச செயல்படுவதற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என கூறிய பொதுச் செயலாளர், அரசாங்கத்திற்கு ஆதரவளித்து கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குவதில் எந்தவித அடிப்படையும் இல்லையெனவும் சுட்டிக்காட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com