Monday, December 31, 2018

மத்திய வங்கி குறித்து அவதானம் தேவை.. எச்சரிக்கின்றார் ரவி கருணாநாயக்க

மத்திய வங்கியிலுள்ள சில மறைமுக சக்திகள், நாட்டை வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதாக, மின்சக்தி,சக்தி வளத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

மத்திய வங்கியிலுள்ள இந்த சக்திகள், ரூபாவை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டு, பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை தர முயற்சித்து வருவதாக, அவர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் உருவாகும் போது ரூபாவின் பெறுமதி, வீழ்ச்சியடைகிறது. மஹிந்த ராஜபக்ச குறுகிய காலத்தில் பிரதமராக செயல்பட்ட நேரம் திடீரென ரூபாவின் பெறுமதி அதிகரித்து, மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்கும் போது, முன்னர் இருந்தவாறே ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகிறது.

இந்த மாற்றம், மத்திய வங்கியிலுள்ள சிலரின் சூழ்ச்சியே என அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அந்த சூழ்ச்சிக்காரர்களை உடன் இனங் கண்டு, அவர்களை பதவி விலக்காவிடின்,, நாட்டிற்கு மிகப்பெரும் ஆபத்து வந்துவிடும் என அவர் எச்சரித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com