Monday, November 19, 2018

பொதுபலசேனா தேரர்கள் மீது கண்ணீர் புகைத்தாக்குல். ஜனாதிபதிக்கு கவலையாம்.

நீதிமன்று அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொது பல சேனா வின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரது நீதிமன்ற விவகாரங்கள் தொடர்பில், மகஜர் ஒன்றை வழங்க வந்த பிக்குகள் மீது பொலிஸார் தண்ணீர் பாச்சி தாக்கியதுடன் கண்ணீர் புகைப்பிரயோகமும் மேற்கொண்டிருந்தனர்.

இத்தாக்குதல் விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றின் ஊடாக ஜனாதபதி மைத்திரிபால சிறிசேன தனது கவலையை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேரர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொள்ள உத்தரவிட்டவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தேரர்களினால் வழங்கப்பட்ட மகஜரை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி அவ்விடயம் குறித்து தேரர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com