Saturday, November 10, 2018

சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி தாமரை மொட்டை கையிலெடுக்கின்றார் நாமல்.

ஹம்பாந்தோட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச, சிறிலங்க சுந்திரக் கட்சியிலிருந்து முடிந்த சீக்கிரம் வெளியேறி சிறிலங்கா பொதுஜன பெரமுன வில் இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பாராளுமன்று நேற்ரிரவு கலைக்கப்பட்டு, எதிர்வரும் 05ம் திகதி பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்த நிலையில் தனது ருவிற்றர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் மஹிந்த ராஜபக்ச தலைமையில் பரந்தளவிலான கூட்டணியொன்றை உருவாக்கி, தேர்தலை சந்திக்கவுள்ளதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி யானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஓர் அங்கமாக இருந்த நிலையில், புதியதோர் முன்னணி உருவாகும் என்ற அறிவிப்பு பல்வேறுபட்ட அரசியல் மாற்றங்களுக்கான முன்னறிவிப்பாக கருதப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com