Thursday, November 22, 2018

சம்பந்தனை எதிர்கட்சி தலைவர் பதிவியிலிருந்து நீக்க வேண்டும். அவுஸ்திரேலியாவுக்கு போட்டுக்கொடுத்தார் விக்கி.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் Victoria Coakley இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார். இவ்விஜயத்தின்போது முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சந்திப்பின்போது நாட்டிலுள்ள அரசியல் அசமந்தப்போக்கை நீக்குவதாயின், மைத்திரி தலைமையில் ஒர் கூட்டு அரசாங்கத்தினை உருவாக்கி அதில் பிரதமராக ரணில் விக்கிரசிங்கவையும் எதிர்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்சவையும் நியமிக்க வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார் விக்கினேஸ்வரன்.

இன்றுள்ள பாராளுமன்ற நிலைகள் மற்றும் கட்சிகளின் ஆசன எண்ணிக்ககளின் பிரகாரம், கூட்டு அரசாங்கம் ஒன்று உருவானால் எதிர்கட்சியாக தமிழரசுக் கட்சி அல்லது ஜேவிபி இருக்க முடியும். இவர்களில் அதிக ஆசனங்களை கொண்டுள்ள தமிழரசுக் கட்சிக்கு அரசியல்யாப்பின் பிரகாரம் எதிர்கட்சி பதவி கிடைக்கும் என்பது அரசியல் யாப்பை வாசிக்க தெரிந்த அல்லது பத்திரிகைகளையாவது வாசிக்கத் தெரிந்த சாதாரண மகனுக்கும் விளங்கக்கூடிய நிலையில் , சம்பந்தன் மீது கொண்ட காழ்ப்புணர்சியில் சிறுபிள்ளைத்தனமாக இக்கருத்தினை அவுஸ்திரேலியப் பிரதித் தூதுவரிடம் கூறியுள்ளார் விக்கினேஸ்வரன்.

இது விடயத்தில் இலங்கைநெட் எழுப்புகின்ற கேள்வி யாதெனில், அரசியல் யாப்பின் அடிப்படை விவகாரங்கள் கூடத்தெரியாது ஒருவர் எவ்வாறு நீதியரசராக செயற்பட்டார் என்பதாகும்.

எனவே இந்த முழு முட்டாளினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் யாவும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com