Tuesday, November 6, 2018

சினந்து வெறுப்பைச் சிந்தி நீ என விழித்தாயா? உமுறுகிறார் மறவன்புலவு.

வவுனியா நகர மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், ஜனாதிபதியை நீ என விழித்திருந்தது தொடர்பில் பல்வேறு தரப்பினர் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் சிவசேனா வின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளதுடன், சுமந்திரன் இந்துக்களை மதம்மாற்றுவதற்கான வேலைத்திட்டத்துடன் தமிழரசுக் கட்சியினுள் நுழைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவ்வறிக்கை வருமாறு:

ஊடகங்களுக்குச் செய்தி அறிக்கை

1. எங்களுடைய உப்பைத் தின்றுவந்து எங்களுடைய கட்சியிலிருந்து ஒருவரைத் திருடி அரை அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்திருக்கின்ற மோசமான செயலை செய்திருக்கின்ற ஜனாதிபதி நீ

2. உனக்கு நாங்கள் எப்படி ஆதரவு கொடுக்க போகிறோம்.

3. எங்களுடைய மக்களை கூறு போடுவதற்கா உன்னை நாங்கள் கொண்டு வந்தோம்?..

4. காப்பற்றியது நாங்கள் அல்லவா.. சூழ்ச்சி செய்கின்ற
கபடமான ஜனாதிபதியாக நீ மாறியிருக்கின்றாய்.

5. இது உன்னுடைய அழிவுக்கு ஆரம்பம் -

1 - 5 பத்திகள் திரு சுமந்திரன் அவர்களின் வவுனியா உரையின் ஒரு பகுதி வீரகேசரியில்.

நீ என்ற உச்சரிப்பின் தொனிதான் சிக்கலானதாக உள்ளது.

இக்காலத்தில் நீ உன்னை போன்ற சொற்களைக் கணவனும் மனைவியும் பரிமாறும் சிற்றின்ப நேரங்களையோ, கடவுளும் அடியவனும் பரிமாறும் பேரின்ப நேரங்களையோ அறியாதவல்லர் தமிழர்.

தமிழர் சார்பாளர் ஒருவர் சினந்து வெறுப்பைச் சிந்தியாவாறு, சிங்களத் தலைமைச் சார்பாளரை நீ என விளித்தல், தமிழரின் மரபல்ல. முதிர்ச்சியற்ற வெறுப்பைத் தூண்டும் பேச்சு. ஆற்றாமையின் உச்ச வெளிப்பாடு.

சினம் என்னும் சேர்ந்தரைக் கொல்லி என்ற குறள் வரி தெரிந்தவர் இவ்வாறு பேசார்.

மத்தியூ 5.43 “You have heard that it was said, ‘Love your neighbor[i] and hate your enemy.’ 44 But I tell you, love your enemies and pray for those who persecute you, இதை உணர்ந்து படித்தவர் தந்தை செல்வா, அவர் இவ்வாறு பேசார் ஒருவேளை சோற்றுக்காக உணராமல் படித்தோர் நீ எனச் சினந்து வெறுப்பை உமிழ்வர்.

7.15 “Watch out for false prophets. They come to you in sheep’s clothing, but inwardly they are ferocious wolves. திரு. சம்பந்தன் அவர்கள் முன்பும் ஆத்திரேலியப் பேச்சுக்காகத் திரு. சுமந்திரனைக் கண்டித்தவர். இப்பொழுதும் அவர் இத்தகைய உரையை ஏற்கார்.

1960இன் இரண்டாவது தேர்தலில் 1971இல் தமிழரசுக் கட்சி சொல்லியதால் சிங்கள மக்கள் தமக்குத் தாமே தமிழர் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைத்தார்கள். சிங்கள மக்களை ஒன்றிணைத்த தமிழர் ஆதரவில்லாத ஆட்சியை 2018க்குப் பின் வரும் தேர்தலில் சிங்களவர் தேர்வார்கள்,

1960இல் வந்த ஆட்சி, 1971இல் வந்த ஆட்சி தமிழரைத் திட்டமிட்டு நசுக்கிய ஆட்சிகள். 2018க்குப் பின்னரும் தமிழரை நசுக்கும் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கச் சிங்களவரைத் தூண்டிய திரு. சுமந்திரன் அவர்களுக்கு நன்றி.

மன்னாரில் முருங்கன்பிட்டியில் 50 குடும்பங்கள், செட்டியார் மகனில் 15 குடும்பங்கள் கடந்த இரு ஆண்டுகளில் மதமாறக் காரணமாகப் பணத்தை அள்ளிக் கொடுத்த மெதடிசுத்த திருச்சபையின் துணைத் தலைவர், வன்னி முழுவதும் இத்தகைய மதமாற்றக் கொடுமைகளில் ஈடுபடும் மெதடிசுத்த திருச்சபை.

தெற்காசிய நாடுகள் சாத்தான்களாகிய புத்தர்களின் இந்துக்களின் பிடியில் உள்ளன. அவர்கள் அனைவரையும் மீட்டுக் கிறித்தவத்துக்குக் கொணர 1334 மில்லியன் அல்லது 1.4 பில்லியன் அல்லது 133 கோடி இலங்கை ரூபாய்களை ஆண்டு வருமானமாகப் பெறும் பிரித்தானியத் தலைமையக நிறுவனம் மாணவர்களுக்கான அனைத்துலக மதமாற்ற அமைப்பின் "International Fellowship of Evangelical Students" (IFES) in UK இலங்கை உள்ளிட்ட 8 நாடுகள் கொண்ட தெற்காசியச் செயலாளர்,https://ifesworld.org/en/regions/south-asia உடுவில் மகளிர் கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினர், திருமதி சாவித்திரி சுமந்திரனின் கணவர்,

திரு சுமந்திரன் அவர்கள்
1. இந்துக்களைத் தீவிர்மாக மதமாற்றத் தமிழரசுக் கட்சிக்குள் ஊடுருவியவர்.
2. சிலுவைக்கு வாக்களியுங்கள் என நாவாந்துறையிலும் கரையூரிலும் பாசையூரிலும் சுவரொட்டி ஒட்டி 2015 தேர்தலில் வாக்குக் கேட்டவர்.
3. தமிழர் நகரில் மாநகராட்சி முதல்வராகத் திட்டமிட்டுக் கிறித்தவரைக் கொண்ர்ந்து உலகுக்குத் தமிழர் முகம் கிறித்தவ முகம் எனக் காட்ட முயல்பவர்.
4. தந்தை செல்வாவின் தூய பராம்பரியம் அறியாதவர்.

இப்படித்தான் பேசுவார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com