Tuesday, November 6, 2018

பிரதியமைச்சர் பதவியை துறந்து ரணிலுடன் இணைந்தார் மனுஷ நாணயக்கார.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக மனுஷ நாணயக்கார அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மனுஷ நாணயக்கார இன்று காலை தனது பதவியை இராஜனாமா செய்து, ரணில் தரப்பிற்கு தாவியுள்ளார்.

பதவியை துறந்து அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , மனோ கணேசன் உட்பட் பல ஐ.தே.க பிரபலங்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதன் பின்னர் காணொலி ஒன்றினூடாக மக்களுக்கு தனது முடிவு தொடர்பாக தெரிவித்துள்ள அவர்,

இந்த ஆட்சி மாற்றம் நிகழ்திருக்கின்ற விதத்துடன் மனச்சாட்சியுடன் இணைந்து கொள்ள முடியாத நிலையில் எனது பதவியை ராஜனாமா செய்துள்ளேன். அத்துடன் இந்நாட்டின் ஜனநாயகத்தை மதிக்கின்ற பெரும்பாலான மக்கள் பாராளுமன்றின் மேன்மையை காக்க வேண்டுகின்றார்கள், அந்தவகையில் அம்மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் விதத்தில் நாளையிலிருந்து என்னால் செய்யக்கூடிய சகலவற்றையும் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com