Thursday, November 15, 2018

ஜனாதிபதி அரசியல் யாப்பை மீற மாட்டாராம். பாராளுமன்ற தீர்ப்பை ஏற்கவும் தயாராம்.

இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதிக்கும் கட்சித் தலைவர்களுக்குமிடையே ஆரம்பமான விசேட சந்திப்பு சற்று முன்னர் நிறைவு பெற்றுள்ளது.

சந்திப்பின் முடிவில் ஜனாதிபதி பாராளுமன்றின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு தயார் எனவும் அரசியல் யாப்பை மீறமாட்டேன் என்றும் கட்சித் தலைவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன நாளை முறைப்படி நம்பிக்கையில்லை தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை நாடாத்தின் அதன் தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்ள தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com