Friday, November 30, 2018

மைத்திரி - சம்பந்தன் சந்திப்பு - பழைய குருடி கதவ திறவடி என்று முடிந்துள்ளது.

நேற்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரதம மந்திரி அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீடு ரத்து பிரேரணையை தொடர்ந்து சபாநாயகர் மைத்திரபால சிறிசேனவை சந்தித்தார்.

பின்னர் இன்று பிற்பகல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனையும் ஏனைய ஐக்கிய தேசியக் முன்னணியின் தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசிவிட்டு மீண்டும் பேசுவோம் என அனுப்பி வைத்தார் மைத்திரி சபாநாயகரை.

இன்று பிற்பகல் 6 மணிக்கு திட்டமிட்டதுபோல் சம்பந்தரை சந்தித்துள்ளார் மைத்திரி. அப்போது சிறைக்கைதிகள் விவகாரம் பேசப்பட்டதாம். அதன் பிரகாரம் சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து எதிர்வரும் 3 ம் திகதி பேசுவோம் என சம்பந்தரை அனுப்பி வைத்துள்ளார் மைத்திரி.

இவ்வாறே இவ்விடயம் எதிர்வரும் 7ம் திகதி வரை இழுபட்டுச் செல்லும் என்று பொதுவாக அனைவராலும் நம்பப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com