Friday, November 30, 2018

3 கோடியே 20 லட்சத்தை ஏப்பம் விட்ட அனந்தி சசிதரன். டிமோகிறேசி அட்மினிஸ்டேட்வாம்! வெள்ளையடிக்கிறது ஊதுகுழல்

வடமாகாண சபையில் சிறிதுகாலம் அமைச்சராக செயற்பட்ட அனந்தி சசிதரன் அந்த குறுகிய காலத்தினுள் 3 கோடியே 20 லட்சங்களை தவறான வழியில் செலவு செய்துள்ளதாக அல்லது மோசடி செய்துள்ளதாக விசாரணைகளுக்கு உட்பட்டுள்ளார்.

வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநராக செயற்பட்ட ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் சந்திரசிறி செயற்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தார். அச்செயற்திட்டத்தின் ஊடாக நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் ஊடாக அவசர தேவைகளை எதிர்நோக்குகின்ற நோயாளிகள் மற்றும் பிறதேவைகளை எதிர்நோக்குகின்ற வட மாகாண மக்களுக்கு நிதிஉதவி செய்யப்பட்டது.

நல்லாட்சியில் இராணுவ மேஜர் ஜெனரல் வீட்டுக்கு அனுப்பப்பட்டதுடன் அவரது செயற்திட்டத்தினையும் சவப்பெட்டியில் அடைத்து மாகாண சபை என்ற மயாணத்தில் புதைத்தனர் நல்லாட்சியின் பங்காளிகள்.

ஆனாலும் இராணுவ மேஜர் ஜெனரலின் எண்ணக்கருவில் உருவான அந்நிதியத்தின் பணத்தை செலவிடுவது எவ்வாறு என திட்டம் வகுத்து கொண்டனர். வட மாகாண சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என்றும் வரையறுத்துக்கொண்டனர்.

புலிப்பொண்டாட்டி வரையறைகளுக்கு கட்டுப்படுவாரா? இல்லையே.. கட்டாக்காலிபோல் செயற்பட்டு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியுள்ளார். அவர் களவு செய்து பக்கெட்டுக்குள் பணத்தை போட்டுவிட்டார் என விசாரணை முடிவுகள் வரும்வரை இலங்கைநெட் ஆல் சொல்ல முடியாது. அதற்காக புலிப்பொண்டாட்டி ஆட்டையை போடாதவர் இல்லை என்றும் கூறமுடியாது. இவர் புலம்பெயர் புலி அமைப்புகள் பலவற்றிடம் ஆட்டையை போட்டுள்ளதாக அவர்கள் பல்லை நறும்பிக்கொண்டு இருக்கின்றனர். அத்துடன் ஒரு அமைப்பிடம் எடுத்துவிட்டு அதைவிட மேலதிகமாக மற்றவர்களிடம் எடுப்பதற்காக சிற்சில சித்துவிளையாட்டுக்களும் காட்டியுள்ளாராம். அவையளும் இவள் வரட்டும் இந்தப்பக்கம் என்று காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

இந்நிலையில், எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பாணியில் எழுதிக்கொண்டிருக்கும் இணையத்தளம் ஒன்று புலிப்பொண்டாட்டி செய்தது தவறுதானாம், ஆனாலும் அதை பாதிக்கப்பட்ட முன்னாள் புலிகளுக்கு கொடுத்திட்டாவாம் என்று வெள்ளையடிக்க முற்பட்டுள்ளார்கள். தென்பகுதியில் கொள்ளையடிப்பவர்களும் தூள் வியாபாரம் செய்பவர்களும் மாட்டிவிட்டால் இறுதியாக சொல்வது தன்சல் கொடுத்துவிட்டோம் அல்லது பன்சலை கட்டிவிட்டோம் என்றுதான். ஏன் புலம்பெயர் தேசத்திலும் கொள்ளையடிக்கப்பட்ட பணங்கள் வடகிழக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள். பயனடைந்தவர்களின் பெயர், ஊர், விபரம் கேட்டால், அது வந்திட்டு தார் றோட்டாலை போய் , கிறவல் றோட்டுக்குள்ளாலை திருப்பி, என்று பதில்வருகின்றது.

முன்னாள் புலிகளுக்கோ அல்லது அவர் கள்ள உறவு வைத்திருக்கும் முன்னாள் ஒட்டுக்குழுக்கள் என்போருக்கோ கொடுக்கலாம், ஆனால் அதை அவர் அவரது சொந்தப்பணத்தில், அல்லது புலம்பெயர் தேசத்தில் பெற்றுக்கொண்டு புலிப்பணத்திலேயே வழங்கவேண்டும். களவு பிடிபட்டுவிட்டால் யாருக்கு கொடுத்தது என்பதெல்லாம் செல்லுபடியற்றது. யாருக்கு கொடுக்கவேண்டுமானாலும் அதற்கென ஒரு சட்ட ஒழுங்கு உண்டாயின் அந்த சட்ட ஒழுங்கு கடைப்பிடிக்கப்படாவிட்டால் அது களவு என்பதை நிழல் அரசாங்கத்தில் இருந்து வந்து ஜனநாயகம் பேசுகின்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் எவ்வளவுதான் ஜனநாயகம் மாதிரி பேசிக்கொண்டு வெள்ளை அடிக்க முற்பட்டாலும் உங்களிடமிருந்து இன்னும் பாசிசத்தின் துற்நாற்றம் போகவில்லை என்பதை இலங்கைநெட் உணர்கின்றது.

குறித்த இணையத்தளம் புலிப்பொண்டாட்டியை காப்பாற்றுவதற்கு அவருக்கு துணைபோன அரச ஊழியர்களை பலிக்கடாவாக்க முனைகின்றனர். அதுவும் அதுவொரு democracy administrative என்று புதியதோர் சொற்பதத்தை அறிமுகம் செய்துள்ளனர். இலங்கையின் administrative system த்தில் இப்படி ஒரு அட்மினிஸ்டேட்டிவ் இருக்கெண்டு இப்பதான் அறிந்திருக்கிறது இலங்கைநெட். விளங்கக்கூடிய பாஷையில் சொல்வதானால் தற்கொலைக்கு தற்கொடை என்று புதுப்பெயர் கொடுத்து ஊரவனின் பிள்ளையை கொல்லக்கொடுத்த அதே மெதெட்தான் இது. அங்கே அதை செய்தவர்கள்தான் இங்கே இதையும் செய்கின்றாகள். அதுவும் சிறந்ததோர் செயற்பாடுதான், புலிகள் எப்போதும் பயன்படுத்திவிட்டு நடுத்தெருவில் விட்டுவிடுவார்கள் என்பதை இவர்களுக்கு துணைபோகும் அரச அதிகாரிகளும் இதனூடாக உணர்ந்து கொள்ளட்டும்.

இதில் இன்னுமொரு விடயத்தை இலங்கைநெட் சுட்டிக்காட்ட விரும்புகின்றது. அரசியல்வாதிகளின் ஊழல் என்பது அவர்களை மிரட்டி அடிபணிய வைக்கும் File (கோப்பு) லாகவே இலங்கையில் காணப்படுகின்றது. முறைப்பாடு ஒன்று கிடைத்துவிட்டால், விசாரணையை ஆரம்பிப்பார்கள், பின்னர் அதைவைத்து அரசியல் பேரம் பேசுவர். கட்சி மாறக்கேட்பர். அரசாங்கம் அமைப்பதற்கு உதவி கேட்பர்.

எனவே இவ்விடயங்களிலிருந்து ரெஜினோல்ட் கூரே விடுபட்டு நேர்மையான விசாரணைகளை மேற்கொண்டு மக்கள் பணம் திருடப்பட்டிருந்தால் அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் தகுந்த தண்டனையை புலிப்பெண்டாட்டிக்கு வழங்கவேண்டும் என்று இலங்கைநெட் கேட்டுக்கொள்கின்றது.

மேலதிகமாக தேவைப்பட்டால் புலிப்பெண்டாட்டி அப்பளம் கொம்பனி ஒன்று அமைப்பதாக மோசடி ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது சம்பந்தப்பட்டவர்களை ஆழுநரின் அலுவலகம் நோக்கி கண்ணை சிமிட்டி விடலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com