Tuesday, November 6, 2018

ஒவ்வொரு தீபாவளியிலும் அடுத்த தீபாவளிக்கிடையில் என மக்களை ஏமாற்றுகின்றேன். ஆண்டவா நல்ல புத்தியைத் தா! சம்பந்தன்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது. அக்கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், „கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதி மாளிகையில் இவ்விழாவில் கலந்து வருகின்றேன். ஒவ்வொரு வருடமும் அடுத்த தீபாவளிக்கிடையில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென வலியுறுத்தி வருகின்றேன். இம்முறையும் அதனையே உரத்து வலியுறுத்த விரும்புகின்றேன்." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு பேசுகையில் :

தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு அடுத்த தீபாவளிக்கிடையில் கௌரவமான தீர்வு எட்டப்படவேண்டும் எனவும் அதற்கு எங்கள் எல்லோருக்கும் இறைவன் நல்ல புத்தியை வழங்கவேண்டுமெனவும் இறைவனை வேண்டியுள்ளார்.

கடந்த காலங்களில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டிருக்கின்றன. அதேபோன்று தற்போதைய சந்தர்ப்பத்தினை மைத்திரிபால சிறிசேன தவற விடக்கூடாதென கேட்டுக் கொள்கின்றேன்.

அவருக்கு தார்மீகக் கடமையொன்று இருக்கின்றது. ஏனெனில் அவரை ஜனாதிபதி ஆக்கியதில் தமிழ் மக்களது பங்களிப்பு இருக்கின்றதை அவர் மறந்திருக்க மாட்டார்.

தற்போது மாறியிருக்கின்ற அரசியல் சூழல் தொடர்பில் தமிழ் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால் ஜனாதிபதியின் காத்திரமான செயற்பாடுகளை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com