Thursday, November 1, 2018

ஆழுநர் கனவுலகில் மிதக்கும் வித்தியாதரன்.

உதயன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியராக இருந்தவர் வித்தியாதரன். தமிழ் தேசியக் கூட்டமைமப்பு தன்னை வட மாகாணத்திற்கான முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டுமென மிரட்டிவந்தார். அனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிரட்டல்களுக்கு அடிபணியவில்லை.

பின்னர் முன்னாள் புலிகளை ஒன்றிணைத்து ஜனநாயக போராளிகள் என்ற அமைப்பை உருவாக்கினார். அவ்வமைப்பினூடாக தமிழ் தேசியக் கூட்டமைபிடம் தனக்கு பா.உ தேர்தலில் வேட்பு மனுக்கேட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கும் மசியவில்லை.

ஜனநாயகப் போரளிகள் என்ற அமைப்பினூடாக தனியாக தேர்தலில் குதித்து மண்கவ்வினார். அது மாத்திரமல்லாது தமிழ் மக்களுக்கும் உலகிற்குமோர் மாபெரும் உண்மையை உணர்தினார். அந்த உண்மை யாதெனில் புலிகளுக்கு மக்கள் மத்தியிலுள்ள செல்வாகு என்னவென்பது. ஜனநாயகப் போராளிகள் பெருவெற்றியீட்டப்போகின்றார்கள் என கதை விட்டவர்கள் அனைவரும் தேர்தல் முடிவின் பின் நவ துவாரங்களையும் அடைத்துக்கொண்டு மறைந்தனர்.

தற்போது, புதியதோர் புரளியை அவிழ்த்து விட்டுள்ளார் வித்தியாதரன். அப்புரளி யாதெனில், மஹிந்த வடக்கு ஆளுநராக வித்தியை நியமிக்க போகின்றாராம். மஹிந்த பொருத்தமான தமிழர் ஒருவர் கிடைத்தால் அவரை வட கிழக்கு ஆழுநராக நியமிக்கலாம். ஆனால் அந்த நபர் வட-கிழக்கின் வாக்குகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு கொண்டுவரக்கூடியவராக இருக்கவேண்டும். ஆனால் வித்தியாதரனால் அது முடியாது என்பது அவர் சந்தித்த இரு தேர்தல்களில் பின்பு நிரூபனமாகியுள்ளது.

இந்நிலையில், வித்தியாதரனை மஹிந்த வடக்கின் ஆழுநராக நியமிக்கவுள்ளார் என்ற செய்தியைப் பரப்பி தனது கனவு எவ்வளவு தூரம் நனவாகும் என நாடிபித்துப்பார்க்கும் வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளார் வித்தியாதரன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com