Friday, November 9, 2018

பாராளுமன்று கலைகின்றது. வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்.

இலங்கையின் எட்டாவது பாராளுமன்றம் கலைக்கப்படுவதான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவுடன் வெளியாகவுள்ளது. இதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பாராளுமன்றினை கூட்ட முற்பட்டிருந்தபோதும், சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் மிடையிலான முரண்பாடு வலுத்தமையினால் இவ்வாறன திடீர் முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

அரசியல் யாப்பின் 33(2) சரத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு பாராளுமன்றினை கலைக்க வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் , பாராளுமன்று கலைக்கப்படுவதாக அவ்வாட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றது.

அத்துடன் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுகூடுவதை இடைநிறுத்தும் அறிவுறுத்தல் பத்திரத்திலும் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் புதிய பாராளுமன்ற தேர்தலுக்கு மக்கள் தயாராகவேண்டியுள்ளது. தேர்தல் எதிர்வரும் ஜனவரியில் இடம்பெறலாம் என்று கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com