Friday, November 9, 2018

வெற்றிகரமாக நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண பேராளர் மாநாடு

வரலாற்றில் முதல்முறையாக வடமாகாணத்தில் கால்பதித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குறுகிய காலத்தில் ஆறாயிரத்துக்கும் அதிகமான அங்கத்தவர்களை இணைத்துக் கொண்டு அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக வடமாகாண பேராளர் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.

இம்மாநாட்டிற்கு சிறப்பு அதிதியாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சுனில் ஹந்துன்நெத்தி, வாழ்நாள் பேராசிரியர் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜெயசிங்க, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக்க அழகப்பெரும, உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப், வடமாகாண செயலாளர் ஸ்ரீ கந்த நேசன் மற்றும் வலய செயலாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஆசிரியர் சங்கம் பெற்றுக்கொடுத்த உரிமைகள் எதிர்காலத்தில் போராடி பெற வேண்டிய உரிமைகள் தொடர்பாகவும் விசேடமாக பேசப்பட்டது வடமாகாண ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாநாட்டு முன்மொழிவுகளும் மேற்கொள்ளப்பட்டது.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com