Thursday, November 22, 2018

புரள்கிறது மீண்டும் தொப்பி.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான A.H.M பௌசி ஆட்சி மாற்றத்தின் பின்னர் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றிருந்த நிலையில் , ஒத்திவைக்கப்பட்டிருந்த பாராளுமன்று கூடிய நிலையில் மஹிந்த ராஜபச்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் இட்டு அப்பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

மஹிந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதாகவும், அதற்கு மைத்திரி துணைபோவதாகவும் தெரிவித்தே அவர் நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கினார். தற்போது அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி ஒன்று வழங்க தயார் என மைத்திரி தரப்பில் கூறப்பட்டதை தொடர்ந்து நாளை அவர் அரசின் பக்கம் உட்காரலாம் என நம்பப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com