Monday, November 26, 2018

முன்னாள் பிரதம நீதியரசரின் கணவருக்கு 5 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை.

அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுக்கு அமைய பிரதீப் காரியவசத்திற்கு 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் என தெரிந்தும் தேசிய சேமிப்பு வங்கியின் நிதியை பயன்படுத்தி த பினான்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலேயே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றையதினம் (26) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

இதன்போது அவருக்கு ரூபா 3 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


இவர் முன்னாள் பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயகவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com