Tuesday, November 6, 2018

மட்டக்களப்பு மக்களை விற்று 20000 கனடிய டொலரை (ரூ 2620000.00) ஆட்டையை போட்டது கனடிய தமிழ் காங்ரஸ்.

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் பண்ணை ஒன்றை அமைத்து அங்குள்ள முன்னாள் புலிகள் மற்றும் பொதுமக்களுக்கு வேலைவாய்பு வழங்கவென கனடிய மக்களிடம் 80000 கனடிய டொலர்களை (ஒரு கோடி ஐந்து லட்சம் ரூபா) சேகரித்த கனடிய தமிழ் காங்கிரஸ், 20000 கனடிய டொலர்களை ஆட்டையை போட்டுள்ளது.

அண்மையில் கட்சி மாறிய எஸ் வியாழேந்திரன் கனடாவிற்கு சென்றிருந்தபோது, அவரை முன்னிறுத்தி கனடா வாழ் தமிழ் மக்களிடம் பணத்தினை வசூலித்த, கனடா தமிழ் காங்கிரஸினர், வியாழேந்திரன் கட்சி மாறிவிட்டார் என்றவுடன் ஆட்டையைபோட்டுள்ளனர்.

இது தொடர்பான உண்மைகளை கனடா வாழ் இலங்கையரான கதி செல்வக்குமார் முகப்புத்தகத்தில் வீடியோ பதிவு ஒன்றினூடாக போட்டுடைத்துள்ளதுடன், கனடிய தமிழ் காங்கிரஸ் காரர்களிடம் காரசாரமான கேள்விக்கணைகளையும் தொடுத்துள்ளார்.



செல்வகுமாரால் இவ்விடயம் அம்பலப்படுத்தப்பட்டு, கேள்விக்குள்ளாக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த முதலாம் திகதி கனடிய தமிழ் பேரவை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது அவ்வறிக்கையில் :

கனடா - மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணைத் திட்டத்துக்காகச் சேகரிக்கப்பட்ட நிதி கனடிய வங்கி ஒன்றில் பிரத்தியேக கணக்கில் சேமிப்பில் உள்ளது. இப் பணம் பேரவையின் வேறெந்தச் செலவீனங்களுக்காகவோ அல்லது சிறீலங்காவிலுள்ள தனிப்பட்ட அல்லது அமைப்புக்களின் தேவைகளுக்கோ பாவிக்கப்பட மாட்டாது என்பதைக் கனடிய தமிழர் பேரவை உறுதி செய்கிறது. அத்தோடுஇ பண்ணை நிலத்துக்கான பத்திரம் கிடைத்தவுடன் கனடா - மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணையின் செயற்பாட்டை கனடிய தமிழர் பேரவை நேரடியாகவோ அல்லது பேரவையின் நம்பிக்கையான உள்ளூர் தொண்டு நிறுவனம் மூலமாகவோ ஆரம்பிக்கும்.

கனடா - மட்டக்களப்பு பண்ணைத் திட்டம் மட்டுமல்லாது எமது இதர பல திட்டங்களையும் செவ்வனே முடித்து வைப்பதில் கனடிய தமிழர் பேரவை மிக உறுதியுடன் உள்ளது.

கனடிய தமிழர் சமூகத்தின் உதவியுடன் எமது தாய் நாட்டு மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கனடிய தமிழர் பேரவை தொடர்ந்தும் அயராது உழைக்கும்.
மேலதிக விளக்கம் மற்றும் தகவல்களுக்கு 416-240-0078 என்ற இலக்கத்தைத் தயவு செய்து அழைக்கவும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 வருடங்களாக இப்பணம் எதற்காக பிரத்தியேக கணக்கில் வைக்கப்பட்டது என்பதை கனடிய பேரணையினர் விளக்குவார்களா?

மேலும் இப்பணத்தை அவர்கள் படுவான்கரை மக்களுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அன்றில் படுவான்கரை மக்கள் கனடிய தமிழ் பேரவையினருக்கு எதிராக தெருவில் இறங்கி எதிர்பினை தெரிவிப்பதுடன் நின்றுவிடாது நேரடியாக கொழும்பிலுள்ள கனடிய தூதரகத்துக்குச் சென்று மோசடி பேர்வழிகள் தொடர்பில் முறையிடவேண்டும்.

அத்துடன் இப்பணம் எந்த முகவர்களுக்கும் செல்லாதவாறு படுவான்கரை பிரதேச மக்கள் தாங்களே ஓர் அமைப்பை உருவாக்கி, குறித்த பணத்தை கனடிய காங்கிரஸினரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

உருவாக்கப்படுகின்ற அமைப்பு அங்குள் பல கிராமங்களையும் இணைத்ததாகவும் , வெளிப்படைத் தன்மையை கொண்டதாகவும் , மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடிய பொறிமுறைகளை கொண்டதாகவும் அமைந்திருக்கு வேண்டும்..

இது தொடர்பாக படுவான்கரை மக்களை விழிப்பூட்டும்பொருட்டு சமூக வலத்தளங்களில் பகிந்த கொள்ளுமாறு இலங்கைநெட் வினயமாக வேண்டுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com