Sunday, October 14, 2018

சிறுவர் துஸ்பிரயோகமற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற கோஷத்துடன் நடைபயணம்.

கிளிநொச்சியில் நேற்று(13) காலை சிறுவர் துஸ்பிரயோகமற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற தொணிப்பொருளிலும், சிறுவர் பெண்களுக்கான, பரிபூரணமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்ற வகையிலும் சமாதான நடைப்பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஊர்வலமானது காலை பத்து மணியளவில் கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியிலிருந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானம வரை சென்றடைந்தது. இவ்வூர்வலத்தில் சுமார் ஜயாயிரம் வரையான சிறுவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள், சிறுவர்களே எதிர்கால தூண்கள் என்ற வாசகங்கங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலம் இடம்பெற்றது.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com