Tuesday, October 9, 2018

தெற்கிலுருந்து வந்த அமைச்சருக்கு சப்ரா சரவணபவான் வீட்டில் குத்தாட்டதுடன் பிரமாண்டமான மது விருந்துபசாரம்.

முகப்புத்தகத்தில் விடயத்தை கசியவிட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போறாராம் சப்ரா சரவணபவான்.

கடந்த மாத இறுதியில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தன யாழ்பாணம் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற நடமாடும் சேவைகள் மற்றும் அபிவிருத்தி குழுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் பொருட்டு இரு நாட்கள் தங்கியிருந்த அமைச்சருக்கு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பிரர் சரவணபவான் தனது வீட்டில் பிரமாண்டமான விருந்துபசாரம் ஒன்றினை வழங்கியுள்ளார்.

இந்நிகழ்விற்கு வடமாகாணத்தை சேர்ந்த அரச உயர் அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


குறித்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவரான தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சிவராஜா கஜன் என்பவர், தெற்கிலிருந்து வந்திருந்த அமைச்சருக்கு மது விருந்துபசாரம் கொடுத்தது சரியா- தவறா என தனது முகப்புத்தகத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் நேற்று தமிழரசுக் கட்சியின் ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது. இவ் ஒன்றுகூடலின்போது தனது வீட்டில் இடம்பெற்ற நிகழ்வை கட்சியின் உறுப்பினர் ஒருவர் முகப்புத்தகம் ஊடாக அம்பலப்படுத்தியுள்ளார். எனவே அவருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளார் சரவணபவான்.

முகப்புத்தகத்தில் சரியா-தவறா என்ற கேள்வியை எழுப்புவது குறிப்பிட்ட நபரின் கருத்துச்சுதந்திரம் எனக் கூறப்பட்டபோது, மது விருந்துபசாரம் வழங்குவது தனது தனிப்பட்ட விவகாரம் என்றும், அது தொடர்பாக கருத்துரைப்பது தனது சிறப்புரிமையை மீறும் செயல் என்றும் வாதிட்ட சரவணபவான், கட்சி நடவடிக்கை எடுக்காவிட்டால், தான் குறித்த நபருக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறையிடவுள்ளதாக மிரட்டியுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் யாப்பின் பிரகாரம் உறுப்பினர்கள் மது விருந்துபசாரங்களை மேற்கொள்ள முடியாது என்றும் , அதன் அடிப்படையில் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றபோது, சரவணபவான் விவாதத்தை கைவிட்டதாக தெரியவருகின்றது.

இதேநேரம் குறித்த கேள்வியை எழுப்பிய சிவராஜா கஜன் என்பவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி கள உத்தியோகித்தராகவும் கடமையாற்றி வருகின்றார். குறித்த கேள்வியை எழுப்பி மறுநாள் அந்த முகநூல் பதிவு பிரதியை அமைச்சரிடம் எடுத்துச் சென்ற பா.உ சரவணபவான், உங்கள் அமைச்சின் கீழ் வரும் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் நபர் ஒருவர் தங்களுக்கு விருந்துபசாரம் வழங்கியதை விமர்சிக்கின்றார் என்றும் அவரை இடமாற்றம் செய்யவேண்டும் என்றும் கோரியதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறாயினும பாராளுமன்ற ஒழுக்கவியல்கோவை மற்றும் அரச உயிரதிகாரிகளின் ஒழுக்கவியல் கோவை யின் பிரகாரம் குறித்த விருந்துபசாரமானது தண்டிக்கத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com