Tuesday, October 9, 2018

புலிக்கொடி காட்டியவருக்கு மாட்டியது லண்டன் பொலிஸ் கை விலங்கு.

ஐரோப்பிய விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கரமசிங்க நேற்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு கடந்த அரசு என அழைக்கப்படுகின்ற குழுவினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

அக்குழுவில் கலந்து கொண்டிருந்தவர்களில் புலிக்கொடியை தாங்கி நின்றவர்கள் மூவர் லண்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் கொடியை அவர்கள் தாங்கி நின்றமைக்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பேசப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள மூவரில் ஒருவர் சொக்கலிங்கம் யோகலிங்கம் என தெரியவருகின்றது. இவர் நாடு கடந்த தமிழீழம் என அழைக்கப்படும் குழுவினரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இக்குழுவினர் தமிழ் மக்களிடம் பெற்றுக்கொண்ட பணத்தை மறைப்பதற்காகவும் தொடர்ந்தும் அவர்களிடம் பணம் அறவிடுவதற்காகவும் இவ்வாறு தெருத்தெருவாக அலைந்து திரிகின்றனர் என்பது பொதுமக்களின் கருத்தாகும். இக்குழுவினுள் தற்போது பிளவு ஏற்பட்டு தங்கள் தலைவனான உருத்திரகுமாரை நீங்கியுள்ளதாக அறிவித்திருந்தனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இவர்கள் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டுவருகின்ற வடக்கு ஆழுநரின் சந்திப்புக்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இருந்தாலும் பெரும்திரளான தமிழ் மக்கள் ஆழுநரை அங்கு சந்தித்து, இலங்கையில் தங்கள் முதலீடுகளை செய்ய முன்வந்துள்ளனர் என அறியக்கிடைக்கின்றது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com