Sunday, October 21, 2018

றோ ஒழுக்கமான புலனாய்வு அமைப்பாம்! இலங்கையிலுள்ளவர்கள் குடிகாரர்களாம் பொன்சேகா புகழாரம்.

உலகிலுள்ள புலனாய்வு அமைப்புக்களில் தலைசிறந்த அமைப்பு றோ எனவும் அவ்வாறானதோர் அமைப்பு அயல்நாட்டு தலைவர்களை கொல்லும் செயற்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது அல்லவென்றும் தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா.

ஜனாதிபதியை கொல்ல மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதியின் பின்னணியில் றோ அமைப்பு உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் பொன்சேகாவிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் மேலும்:

றோ அமைப்பினுள் அதி உச்ச ஒழுக்கம் பேணப்படுகின்றது. எமது புலனாய்வுத்துறை எடுத்துக்கொண்டால் அதனுள், சில குடிகாரர்களும் இருக்கின்றார்கள், கப்பம் பெறுகின்றவர்கள் இருக்கின்றார்கள், வெள்ளைவேன் காரர்கள் இருக்கின்றார்கள். ஆனாலும் றோ அமைப்பானது இலங்கயிலுள்ள ஒரு அரசியல்வாதியை கொல்ல நினைக்கும் என்று நான் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் குறித்த கொலை முயற்சியில் றோ அமைப்பின் பின்னணி உள்ளது என்று நம்பப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள இந்தியரிடமிருந்து றோ அடையாள அட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதரகத்திடமிருந்து விளக்கம் கோரியபோது, புலனாய்வுத் துறைகளுக்கு மனப்பாடமான பதிலொன்றை இந்திய தூதரகம் சொல்லியுள்ளது. அந்த பதில்தான் குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவராம். நீர் கொழும்பு பிரசதேசத்தில் பிரத்தியேக வகுப்பு நடாத்திக்கொண்டிருந்தவர் மாட்டியவுடன் பைத்தியக்காரனானார்.

இது புலனாய்வுத் துறைகளின் பொதுவான அணுகுமுறை. தங்களது ஆட்கள் மாட்டி விட்டால் உடனடியாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று ஒரு போடு போடும். பின்னர் அவரை பரீட்சிக்க வைத்தியர்களை நியமிக்கும். அந்த வைத்தியர்கள் சிலநேரம் அந்த புலனாய்வுத் துறைக்கே உரியவர்களாக இருப்பார்கள் அல்லது வைத்தியர்களை விலைக்கு வாங்கும். அதன் பின்பு மனநிலை பாதிக்கப்பட்டவர் சர்வ சாதாரணமாக நாட்டுக்கு கொண்டு செல்லப்படுவார். மாட்டிக்கொண்டதற்காக வாங்கிக்கட்டுவார். அது அவர் எவ்வாறு மாட்டினார் என்பதை பொறுத்து.

நாட்டுக்கு கொண்டுசெல்வதற்குரிய எந்த முயற்சியும் பலிக்கவில்லையெனில், அவருக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கைவிட்டுவிடும். சிறையில் இருக்க வேண்டியதுதான்.

இங்குள்ள விசேடமென்னவென்றால், மேற்படி நபர் மாட்டியது ஒன்றும் இலங்கை பாதுகாப்பு பிரவினர் மேற்கொண்ட நடவடிக்கை கிடையாது. இலங்கையில் எந்தெந்த நாட்டு புலனாய்வு இறங்கி நிற்கின்றது என்பது இலங்கை புலனாய்வுத்துறைக்கு தெரியுமோ, தெரியாதோ மொசாட்டுக்கு தெரியும். அவ்வாறு மொசாட்டின் கண்காணிப்பிலிருந்த றோ உளவாளி என்று நம்பப்படுபவர்தான் மேற்படி தோமஸ் என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ளவர். மொசாட்டின் வேலையே இதுதான் காத்திருந்து சரியான நேரம் வரும்போது மாட்டிவிடும். தற்போது இலங்கை, இந்தியாவிற்கு அடிபணிந்து மனநோயாளி அது இது என்று இலகுவில் அனுப்பி விடுவது கஷ்டமான விடயம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com