Saturday, October 20, 2018

ஊழலை எதிர்க்க இணைவீர் எம்முடன்! யாழ்பாணத்தில் ஜேவிபி துண்டுப்பிரசுரம்.

நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றுவரும் ஊழல்மோசடி மற்றும் வீண்விரயங்களுக்கெதிராக ஜேவிபி யினர் எதிர்வரும் 23 ம் திகதி கொழும்பில் பாரிய எதிர்ப்பார்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இவ்வார்ப்பாட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் மக்களை திரட்டும் பொருட்டு இன்று யாழ்பாணத்தில் துண்டுப்பிரசுங்கள் விநியோகிக்கப்பட்டது.

வரிச்சுமை, எரிபொருள் மற்றும் விலைவாசி அதிகரிப்பு , சிங்கப்பூர் எட்கா ஒப்பந்தம் உள்ளிட்ட நாட்டை தாரைவார்க்கும் ஒப்பந்தங்கள், துறைமுகம் , மத்தல , எண்ணெய் குதங்கள் உள்ளிட்ட தேசிய வளங்களை விற்பனை செய்தல் என்பவற்றிக்கு எதிராக மேற்படி பேரணியூடாக ஜேவிபி மக்களை திரட்டுகின்றது.



குறித்த துண்டுப்பிரசுர விநியோகத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் டில்வின் சில்வா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப், வடமாகாண செயலாளர் நேசன் மற்றும் பொது மக்கள் , கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com