Thursday, October 18, 2018

பயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் ஒரே நாடு இலங்கையே. கூறுகின்றார் விமல்.

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணியற்றவர்களாக மாறியுள்ள இவ்வரசாங்கம் பயங்கரவாதத்தை உக்கப்டுத்துகின்ற நாடாகவும் பயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு வழக்குகின்ற நாடாகவும் மாறியுள்ளது என குற்றஞ்சுமத்துகின்றார் பா. உ விமல் வீரவன்ச.

ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில்:

இதில் வியப்பு யாதெனில் தனது தந்தையை கொன்றவர்களுக்கு நஷ்டஈடு வழங்கு என பாராளுமன்றில் கை உயர்த்தியுள்ளார் சஜித் பிறேமதாஸ. அதையேதான் நவின் திஸாநாயகவும் செய்துள்ளார்.

இந்த அரசாங்கம் பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஒன்றை கொண்டுவரவுள்ளது. அச்சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டவுடன் மனித உரிமைகள் சங்கங்களை உடனடியாக அனுமதிக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. அவ்வாறாயின் குறித்த சட்டமானது பயங்கரவாதத்தை தடுப்பதற்கு பதிலாக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது என்பது எனது கருத்து.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com