Monday, October 1, 2018

பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பூட்டு, அதன் இயக்குனரை கொல்ல திட்டமாம். கம்பன்பில

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதிப் பெலிஸ் மா அதிபர் நாலக சில்வா நாமல் குமார என்ற நபர் ஒருவரை ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய வை கொலை செய்ய தூண்டினார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபரை படுகொலை செய்ய திட்டம் தீட்டப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்து அவர், தொடர்ந்து பேசுகையில் :

ஜனாதிபதி படுகொலை சதித்திட்டம் என்பது மற்றுமொரு கொலை முயற்சி கிடையாது. அரச விரோத சதித் திட்டமாகும். அரச விரோத சதித்திட்டம் பற்றி கேள்விப்பட்ட உடன், சந்தேக நபர்களை கைது செய்வதனையே செய்திருக்க வேண்டும்.

இலங்கையில் மட்டுமல்ல உலகின் ஏனைய நாடுகளிலும் இதே நிலைமையேயாகும். எனினும் இந்த உலக நெறிமுறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிற்கு அமுல்படுத்தப்படுவதில்லை.

நாலக சில்வா வாய் திறந்தால் இன்னும் எத்தனை பேர் சிறைக்கு செல்ல நேரிடுமோ தெரியவில்லை. இதனால் இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இருக்கும் நபர்களுக்கு நாலக சில்வாவை படுகொலை செய்வது தவிர வேறு வழியில்லை.

நாலக சில்வாவை படுகொலை செய்வதுடன் அவருக்கு தெரிந்த அனைத்து இரகசியங்களும் குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும். கைது செய்யாது இருப்பதற்கான காரணம் நாலக சில்வாவை படுகொலை செய்யும் நோக்கிலாகும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


ஆனாலும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவின் பிரதிப் பெலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் அலுவலகம் சட்டரீதியாக மூடப்பட்டுள்ளது.

அவருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கும் முகமாகவே. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸ் தரப்புக்கள் அவருடைய பயன்பாட்டில் இருந்த இரண்டு மடிக்கணணிகள் விசாரணைகளுக்காக எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றது.

இவ்வாறான மென்போக்குடனான விசாரணைகளை மூலம் குறித்த நடவடிக்கை தொடர்பான விசாரணைகளில் முன்னேறிச்செல்ல முடியுமா என்ற சந்தேகத்தை மக்கள் எழுப்புகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com