Thursday, October 4, 2018

மண்டையன் குழுவினர் சுட்டுபோட்ட உடலங்களை எண்ணி அடுக்கியதே தேசியத்துக்கான தகமையாம். சயந்தன்

இன்று வட மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொண்டு பேசிய உறுப்பினர் சயந்தன், தான் சிறுவனாக இருந்தபோது மண்டையன் குழுவினர் சாவகச்சேரிப் பிரதேசத்தில் சுட்டுப்போட்டிருந்த உடலங்களை தனது கையால் எண்ணி அடுக்கியதே தான் இன்று தமிழ் தேசியம் கதைப்பதற்கான தகமை என்று தெரிவித்துள்ளார்.

நேற்று சுரேஸ் பிறேமச்சந்திரன் தற்போது தமிழ் தேசியம் பேசுகின்றவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது என்ற கேள்வியை ஊடகங்களுடாக கேட்டிருந்தார். அக்கேள்விக்கு தான் சபையிலே பதிலளிக்க விரும்புவதாக தெரிவித்தே சயந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று தேசியம் என்ற சொல் ஊழல் மற்றும் வினைத்திறனின்மை என்பவற்றை மறைப்பதற்காகவே பயன்பட்டு வருவதாகவும் போலித்தேசியவாதியின் கைகளில் தமிழ்த்தேசியம் சிக்கிச்சின்னா பின்னமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com