Monday, October 22, 2018

ரெலோவை கூறுபோட திட்டம் தீட்டும் விக்னேஸ்வரன். மகனும் குடும்பத்துடன் களமிறங்கினார்.

நாளையுடன் வடமாகாண சபைக்குரிய காலம் முடிவுறுகின்றது. முதலமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் அது நிறைவுபெறவுள்ளது. முதலமைச்சர் அத்துடன் தனது அடுத்த தவணைக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளார். அவர் தனக்கு ஆதரவாளர்களை தேடி வருகின்றார். அந்தவகையில் நேற்று சிவாஜிலிங்கத்திற்கு தூண்டில் போட்டுள்ளார்.

யாழ்பாணத்தில் நேற்று கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் விக்னேஸ்வரன் - சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அங்கு பேசிய விக்னேஸ்வரன், தப்பி சிவாஜிலிங்கம் தன்னுடன் இணைந்து பயணிப்பார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கொழும்பிலிருந்து சுற்றுலாவிற்காக யாழ்பாணம் வந்திருக்கும் தனது மகன் குடும்பத்தினரையும் சிவாஜிலிங்கத்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் விக்னேஸ்வரன்.



ரெலோ தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ரெலோ த.தே.கூ வை விட்டு வெளியேறி விக்கி-கூட்டுடன் இணையும் என்று பேசப்பட்டபோதிலும் அது நிறைவேறவில்லை. இந்நிலையிலேயே சிவாஜிலிங்கத்தை உடைத்து ரெலோவை கூறுபோடுவதற்கான வேலைத்திட்டம் விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com