Saturday, October 6, 2018

பயங்கரவாதிகளே சிறையில் உள்ளனர். அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. நீதி அமைச்சர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் என்று எவரும் இந்த நாட்டில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இது சம்பந்தமாக பேசி தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

அண்மையில் கண்டி சட்டத்தரணிகள் சங்கத்துடன் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்குப் பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தகவலறியும் சட்டத்தின் கீழ் எந்தவொரு நபரும் தகவல் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2015 ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் இந்த நாட்டில் பாதாள உலக குழுவினர் செயற்படுத்தப்பட்டதாகவும், தற்போதைய அரசு அதனை தடுத்திருப்பதாகவும் அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com