Thursday, October 4, 2018

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டு என்ற பொலிஸ் சார்ஜன்டுக்கு விளக்க மறியல்!

தெபுவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பிரதேசத்தில் சட்டவிரோத மண்ணகல்வில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டதுடன் வாகனமும் பொலிஸ் தடுப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மற்றும் வாகனத்தை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி விடுதலை செய்ததை எதிர்த்து குறித்த பொலிஸ் சார்ஜனட் போர்க்கொடி தூக்கியதுடன் நீதி யாவருக்கும் சமமானது என்றும் குறித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவிடத்து தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது உத்தியோகபூர்வ ஆயுதத்துடன் வீதிக்கு இறங்கியிருந்தார்.

அங்கு விரைந்த பொலிஸ் உயரதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடாத்தியும் பலனளிக்காத நிலையில் வீசேட அதிரடிப்படையினர் அவரை மடக்கி ஆயுதத்தை பறித்ததுடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட வீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டார் என அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அநீதியை ஒழித்து நீதியை நிலைநாட்ட இலங்கையிலே சிலர் பாடுபடுகின்றனர் என்பதும் அதிகார வர்க்கம் அவற்றை துவம்சம் செய்கின்றது என்பதும் குறித்த விடயத்தினூடாக தெளிவாகியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com