Friday, October 26, 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்று முன்னர் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்திருந்தது.

இந்த நிலையில், சமீப காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் தோன்றியிருந்தன.

நீண்ட நாட்கள் திரை மறைவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவாக ஒரிரு மணித்தியாலயங்களில் இம்மாற்றம் இடம்பெற்றுள்ளது.

96 பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் கொண்ட மஹிந்த தரப்பினருடன் எதிர்வரும் சில மணித்தியாலயங்களில் ஐ.தே.க பிரபலங்கள் பல இணையவுள்ளதாக தெரியவருகின்றது.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com