Friday, October 19, 2018

கைத்தொலைபேசி வாங்கிக்கொடுத்து 16 வயது மாணவிக்கு விஞ்ஞானம் கற்பித்தவருக்கு விளக்க மறியல்.

16 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வெல்லாவெளிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆசிரியனை எதிர்வரும் கார்த்திகை மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

பெரியநீலாவணை யைச் சேர்ந்த யாதவன் என்ற பெயருடைய குறித்த நபர் மேற்படி குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் சார்பாக கல்முனையைச் சேர்ந்த ரமீஸ் என்ற பிரபல சட்டத்தரணி சார்பில் சட்டதரணி ஒருவர் ஆஜராகியுள்ளார்.

மண்டூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் விஞ்ஞான ஆசிரியராக தொழில்புரிந்து வந்த யாதவன், அப்பாடசாலையில் தரம் 11 ல் கல்வி பயின்று வரும் மாணவியை நீண்ட நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த ஆசிரியர் வெல்லாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் உழைத்து வருகின்றார். இந்நிலையில் தனது அம்மம்மாவுடன் வசித்துவரும் சிறுமியை 32 வயதான, திருமணமாகி ஒரு குழந்தையுள்ள மேற்படி ஆசிரியன், தொடர்சியாக துஷ்பிரயோகம் செய்து வந்ததாக சிறுமி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

ஆசிரியன் சிறுமிக்கு கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அதனூடாக சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி பாடசாலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் பிரத்தியோக கல்வி நடவடிக்கையின் போது பாடசாலையில் வைத்தும் ஏனைய இடங்களுக்கு வரவழைத்தும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com