Thursday, September 13, 2018

வரலாற்றில் மட்டக்களப்பை குருதி தோய்த்த நாட்களில் இன்றும் ஒன்று!

மட்டக்களப்பில் இற்றைக்கு 31 நாட்களுக்கு முன்னர் அந்த மண் இரத்தந்தால் தோய்கப்பட்டநாள். அந்த மண் வஞ்சத்தால் இரத்தம் குளித்த நாள். 1987.09.13 அன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியற்துறைச் செயலாளர் வாசுதேவா (வாசு), படைத்துறைச் செயலாளர் ஜோதீஸ்வரன் (கண்ணன்), பாவானந்தன் (சுபாஸ்), ஆனந்தன், மற்றும் பலரின் உயிர் நயவஞ்சகமாக பறிக்கப்பட்ட நாள்.

இந்த நாளில்தான் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளராகவிருந்த பொட்டு, அன்றைய மட்டு-அம்பாறை இராணுவத் தளபதியாவிருந்த கருணா, புலிகளின் துணை அரசியல் துறைப்பொறுப்பாளராவிருந்த கரிகாலன், சித்தா உள்ளிட்ட சிலர், புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நாடாத்தவென அவர்களின் காரியாலயத்திற்கு சென்றனர். சென்றவர்களுக்கு வாசுதேவாவின் வீட்டில் காலை உணவு பரிமாறப்பட்டது. ஒரு மேசையில் இருந்து காலை உணவை உண்டு மகிழ்ந்து அரசியல் பேசினர். செல்கையில் உங்களிடம் காலைச் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டோம். எங்களது காரியாலயம் வந்து மதியச் சாப்பாடு சாப்பிடவேண்டும் என்று அன்புடன் அழைத்தனர். புலிகளின் நன்றியுணர்வை அன்பையும் கண்ட புளொட்டுக்கள் மெய் மறந்தனர். நிச்சயமாக வருகின்றோம் என்றனர்.

அன்றைய சகல கருமங்களையும் விட்டுவிட்டு பாசிக்குடாவிலிருந்து புலிகளின் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். வழியில் கிரான் சந்தியில் வழிமறிக்கப்பட்ட அவர்கள் மீது குண்டு மழை பொழியப்பட்டது. அங்கே குற்றுயுராக கிடந்த ஓரிருவர் தண்ணீர் கேட்டனர். துண்ணீர் கொடுக்க முன்வந்த மக்களை இடுப்பில் பிஸ்டலுடன் இறுமாப்புடன் நின்ற கருணா தடுத்து நிறுத்தினான். இதுவும் எம்வரலாற்றில் நடைபெற்றதொன்று.

ஆனால் இன்று முகநூலில் இருக்கின்ற சிலர் இவர்களை நினைவுகூரலாம். அவ்வமைப்பினர் உத்தியோகபூர்வமாக அதனை செய்யமுடியாக கயவர்களாக மாறியுள்ளனர் என்பது வேதனையான விடயம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்று இதே குடும்பத்தினர் புலிகளின் காரியாலயத்தினுள் நுழைந்து புலிக்கொடியை கிழே இறக்கிபோட்டு காலால் மிதித்தனர். அது புலிகளின் வரலாற்றில் மட்டக்களப்பில் விழுந்த முதலாவது அடி என்பதும் வரலாறு.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com