Thursday, September 13, 2018

தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைக்கு நீதிமன்று இடைக்கால உத்தரவு.

வலி தெற்கு பிரதேசசபை தவிசாளர் தெரிவில் கட்சி கட்டுப்பாடுகளை மீறி பிரதேச சபை உறுப்பினரான ஜி.பிரகாஷ் நடந்து கொண்டிருந்தார் என்றும் கட்சியின் அறிவுறுத்தலை மீறி தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார் என்றும் அதை தொடர்ந்து அவரிடம் கட்சியினால் கோரப்பட்ட விளக்கத்திற்கு போதிய பதில் அளிக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக கடந்தவாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழரசுக்கட்சியினர் தன்னை கட்சியிலிருந்து நீக்கியமை சட்டத்திற்கு முரணானது என வலி தெற்கு பிரதேசசபையின் உறுப்பினர் ஜி.பிரகாஷை யாழ் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கினை இன்று விசாரணை செய்த யாழ் நீதிமன்று அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை தவறானது என்று இடைக்கால தடை விதித்துள்ளதுடன் வரும் 25ம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்துள்ளது.

தமிழரசுக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.பிரகாஷ் சார்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்னிலையானார்.

அவ்வழக்கில் பிரதிவாதிகளாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம், பொருளாளர் பொ.கனகசபாபதி ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com