Saturday, September 29, 2018

ஹாட்லிக் கல்லூரிக்கு காணி தேவை இல்லையாம்! கார் பார்க்பண்ண இடம்வேண்டுமாம். யாழ் சட்டத்தரணிகள் சங்கத்தினர்.

பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தின் ஒரு பகுதி காணியில் 1996ஆம் ஆண்டு முதல் இராணுவ முகாமொன்று அமைந்துள்ளது. உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்டு தற்போது, அது நீக்கப்பட்டுள்ள காணியை விடுவிக்குமாறு சில காலங்களுக்கு முன்னர் யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாகவிருந்த இளஞ்செளியன் அவர்கள் யாழ் இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சியிடம் வேண்டுதல் விடுத்திருந்தார்.

இந்நிலையில், குறித்த காணியை அருகிலுள்ள ஹாட்லிக்கல்லூரிக்கு வழங்கவுள்ளதாக கொழும்பு நீதியமைச்சிலிருந்து யாழ் நீதிமன்ற பதிவாளருக்கும், பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற பதிவாளருக்கும் விசேட தகவலொன்றினுடாக நேற்று அறிவிக்கப்பட்டள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது

இதனையடுத்து நேற்று பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் கூடிய சட்டத்தரணிகள் பாடசாலைக்கு காணி தேலையில்லை என்றும் தமது கார்களை பார்க்பண்ணுவதற்காக நீதிமன்றுக்கு காணி தேவைப்படுகின்றது என்பதையும் நீதியமைச்சுக்கு தெரியப்படுத்துவோம் என முடிவெடுத்துள்ளார்களாம் என அறியக்கிடைக்கின்றது.

வருங்கால சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பாடசாலைக்கான காணியை தடுத்து, தங்கள் கார்களை பார்க் பண்ண காணி தேடக்கூடிய சுயநலன்கொண்டோர் தமிழ் சமூகத்தில் மாத்திரமே இருக்கக்கூடும் என மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

யாழ் சட்டத்தரணிகள் அவ்வாறு செயற்படுவார்களானால் ஹார்ட்லி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com